தமிழைப் பற்றி அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்........... |
||
2500 ஆண்டாயினும் தமிழ் இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களும், தொல்காப்பிய இலக்கணமும், இன்று படித்தாலும் பொருள் புரிகிறது. இது பிற மொழிகளுக்கு இல்லாத சிறப்பாகும்.
வ.ஐ. சுப்பிரமணியம் (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம்)
|
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.
- மாபாவலன் பாரதி
|
திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று யான் தமிழ் பயிலத் தொடங்கினேன்.
- காந்தியடிகள்
|
செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியையும் இலக்கியப் பெருமையில் இலத்தின் மொழியையும் வெல்ல வல்லது தமிழ்மொழி.
- அறிஞர் வின்சுலோ |
தம் கல்லறையில் மேல் “இங்கே தமிழ் மாணவர் உறங்குகிறார் “ என்று கல்லில் பொறித்து வைக்குமாறு விருப்பு முறி (உயில்) எழுதி வைத்த முனைவர் ஜி.யு.போப் பாதிரியார்
தமிழ்மொழி எம்மொழிக்கும் தாழ்ந்த மொழியன்று
|
செந்தமிழே உயிரே நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித்தேனே நைந்தாயெனில் நைந்துபோகும் என் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே !
- பாவேந்தர் பாரதிதாசனார்
|
தமிழ் பண்டையது; நலம் சிறந்தது; உயர் நிலையில் உள்ளது; வடமொழி உதவியின்றி இயங்கவல்லது.
மொழியறிஞர் டாக்டர் கால்டுவெல் Dr.Calwell
|
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்த்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கொழிந்து சிதையா உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துமே ! - பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை |
|
|
தமிழியல் ஆய்வுக் களம் |