பாரினில் உண்டோ மேன்மை !

 

அவனவன் வாயா லன்றிப்

        பிறனெவன் உண்ண வல்லான்

அவனவன் கண்னா லன்றிப்

        பிறனெவன் காண வல்லான்

அவனவன் செவியா லன்றிப்

        பிறனெவன் கேட்க வல்லான்

அவனவன் மொழி யினத்தைப்

         பிறனெவன் காப்பான் வந்தே !

 

தன்னனினம் காப்ப தற்கே

      தகவிலான் தன்னி னத்தின்

திண்ணிய நெறியைப் போற்றுந்

      திறனிலான் தேர்வார் தம்மை

அன்னிய ரென்றே யெண்ணி

     ஆழ்குழி வெட்டி யதனுள்

கண்ணிலா னா வீழும்

      கதையிவன் கதையாய்ப் போச்சே!

  

பட்டங்கள் பெற்றா லென்ன?

       பதவிகள் பெற்றா லென்ன?

கற்றவர்க் கூடி யொன்றாய்

      கலந்து ரையாடி யென்ன ?

உற்றதோ ரினத்தால் மொழியால்

      ஒற்றுமை யாகா நெறிபால்

பற்றுதல் கொண்டு விட்டால்

         பாரினில் உண்டோ மேன்மை !

 

பாவலர் அ.பு.திருமாலனார

 
     
Free Web Hosting