குண்டு போடு
தமிழுக்கு நீசெயுந் தொண்டு- நின் பகைமீது பாய்ச்சிய குண்டு
தமிழில்நீ புலமைபெற வேண்டும்-அது தமிழ்பெறத் தமிழரைத் தூண்டும். தமிழிலே யேபேச வேண்டும்-அது தனித்தமிழ் வளர்ச்சியைத் தூண்டும்.
தமிழ் பேசு; தமிழிலே பாடு- நீ தமிழினிற் பாடியே ஆடு. தமிழ்ப்பாட்டை யேகாதிற் போடு- தமிழ் தப்பினால் உன்காதை மூடு.
வாணிக விளம்பரப் பலகை- அதில் வண்தமிழ் இல்லாவிடில் கைவை. காண்கநீ திருமண அழைப்பைப்- பிற கலந்திருந்தால் அதைப் புய்புய்
பொருள்களைத் தமிழினில் அழைப்பாய்- பிற பொருந்தாப் பெயர்களை ஒழிப்பாய் தெருப்பெயரில் தமிழே இழைப்பாய்- அதிற் சீறுவார் மடமையை ஒழிப்பாய்
தமிழிலே வழிபாடு வேண்டிப்- பின் தளர்ந்தனன் முன்னமோர் ஆண்டி அமைவாக அவனையும் தூண்டி- நீ அறஞ்செய்க சோம்பலைத் தாண்டி.
வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய்-எதிர் வரக்காணில் காறிநீ உமிழ்வாய் கடனென்று தமிழ்த்தொண்டில் அமிழ்வாய்-ஒரு கடல்போன்ற புகழ்கொண்டு கமழ்வாய்
பாவேந்தர் பாரதிதாசனார்
|
||