உறுதியும் நன்றியும்
எவரெனத் தடுக்கினும் எவரெனைக் கெடுக்கினும் என்கை வீசி நடையிடுவேந் ஒரு சுவர் எனைத் தாங்கினும், துரும்பு, கை கொடுக்கினும் செந்தமிழ் மாலைகள் அவைக்கிடுவேன்!
மலையே குலுங்கினும், வானே இடியினும் மனங்குலை யாமல் நடப்பேன் ! துயர் அலைகலு க்கிடையோர் கட்டையே உதவினும் அதன் திறன் நினைந்து புகழ் கொடுப்பேன் !
கடுஙஞ்சொல் வீசினும், கணைகளைத் தொடுக்கினும் கடமையில் துவளேன்; வினைமுடிப்பேன்! நான் படுந்துயர்க்க் கிரங்கிக் கைகொடுப் போர்க்குப் பைந்தமிழ் மாளிகை கட்டிடுவேன் !
எனைவெறுத் தாலும், எனைச்சிதைத் தாலும் ஏற்றுள கொள்கைக் குயிர் தருவேன்!- ஒரு தினையள வேனும் துணைவரு வோரைத் தீந்தமி ழால்நிலை நிறுத்திடுவேன்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
|
||