உறுதியும் நன்றியும்

 

எவரெனத் தடுக்கினும் எவரெனைக் கெடுக்கினும்

     என்கை வீசி நடையிடுவேந் ஒரு

சுவர் எனைத் தாங்கினும், துரும்பு, கை கொடுக்கினும்

     செந்தமிழ் மாலைகள் அவைக்கிடுவேன்!

 

மலையே குலுங்கினும், வானே இடியினும்

     மனங்குலை யாமல் நடப்பேன் ! துயர்

அலைகலு க்கிடையோர் கட்டையே உதவினும்

     அதன் திறன் நினைந்து புகழ் கொடுப்பேன் !

 

கடுஙஞ்சொல் வீசினும், கணைகளைத் தொடுக்கினும்

     கடமையில் துவளேன்; வினைமுடிப்பேன்! நான்

படுந்துயர்க்க் கிரங்கிக் கைகொடுப் போர்க்குப்

     பைந்தமிழ் மாளிகை கட்டிடுவேன் !

 

எனைவெறுத் தாலும், எனைச்சிதைத் தாலும்

     ஏற்றுள கொள்கைக் குயிர் தருவேன்!- ஒரு

தினையள வேனும் துணைவரு வோரைத்

     தீந்தமி ழால்நிலை நிறுத்திடுவேன்.

 

 

பாவலரேறு பெருஞ்சித்திரனார

 

 

 
     
Free Web Hosting