இந்தத் தனித்தமிழ் நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்

 
1.முழுமையாகத் தமிழிலேயே வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
2.திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடும் தமிழ் எண்களைப் பயன்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன.
3.ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்), பிறைநாள்(திதி) முதலியன தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.
4.பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணையும் ஐந்திர(சோதிட)க் குறிப்புகளும் உள்ளன.
5.தமிழ் அருளாளர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் சிறப்பு நாட்களும் உருவப்படங்களும் உள்ளன.
6.பொதுவிடுமுறை, பள்ளி விடுமுறை, விழா நாட்கள் முதலான விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
7.ஆங்கில நாள்காட்டியை உள்ளடக்கியதோடு, தேவையான அளவு சமற்கிருதத் துணை விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
8.தமிழியல் முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விழைவோருக்கும் இனி வாழ முயல்வோருக்கும் வழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
9.வள்ளுவர் வள்ளலார் இணைந்திருக்கும் அட்டைப் படத்தோடு முழு வண்ணத்தில் தரமாகவும் கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.

 
உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக மு‎ன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களையும் ஆர்வலர்களையும் இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்குமாறு தமிழியல் ஆய்வுக் களம் கேட்டுக்கொள்கிறது.


 
தொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம் (Persatuan Pengajian Kesusasteraan Tamil)
d/a No.17, Lorong Merbah 2, Taman Merbah, 14300 Nibong Tebal, SPS, P.Pinang, Malaysia.
தொலைப்பேசி : 6013-4392016 / 6012-4643401
Free Web Hosting