தமிழை முன்னெடுக்கும் உலகின் முதலாவது
தனித்தமிழ் நாள்காட்டி 2008
தமிழ்
நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும்
சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும்
முயற்சியாக, முழுமையாகத் தமிழிலேயே
நாள்காட்டி வெளிவந்துள்ளது. தமிழ் மொழி,
இன, சமய, பண்பாடு சார்ந்த தமிழியல் மீட்பு,
மேம்பாட்டுப் பணிகளை அமைதியாகவும்
ஆக்ககரமாகவும் ஆற்றிவருகின்ற தமிழியல்
ஆய்வுக் களம் இந்தத் தமிழ் நாள்காட்டியை
வெளியிட்டுள்ளது. தமிழியல் ஆய்வுக்
களத்தின் நிறுவனர் ஆய்வறிஞர்
இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை
வடிவமைப்புச் செய்துள்ளார்.
தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக்
கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டியென
இதனைத் துணிந்து குறிப்பிடலாம்.
இப்படியொரு அரிய சாதனை நம் மலேசியத்
திருநாட்டில் நிகழ்ந்திருக்கிறது என்பது
மலேசியத் தமிழர்களுக்குப் பெருமையளிக்கும்
செய்தியாகும். முற்றும் முழுவதுமாகத்
தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து
வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள இந்த
நாள்காட்டி தமிழர்கள் இல்லங்கள்தோறும்
கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.
மேலும் >>>